ஏர் ஆம்புலன்ஸ் விபத்து அமெரிக்காவில் 5 பேர் பலி| 5 killed in Air Ambulance accident in USA

வாஷிங்டன்-அமெரிக்காவில் வான் வழியாக நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்லும், ‘ஏர் ஆம்புலன்ஸ்’ என அழைக்கப்படும் ஆம்புலன்ஸ் விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம், ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு நேற்று புறப்பட்டது.

இதில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் ஐந்து பேர் இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்ட போது, அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி இருந்ததை கண்டறிந்தனர். அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.