கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அடுத்த மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த மெல்பின் மனைவி சசிகலா என்பது தெரிய வந்தது. இவர்
நேற்று காலை தனது மூன்று வயது குழந்தை மற்றும் தாயாருடன் ஒரு ஆட்டோவில் காப்புக்காட்டில் உள்ள ஒரு இடத்திற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக சென்றார்.
அதன் பின்னர் சசிகலா தனது தாயாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனது குழந்தையுடன் ஆட்டோவில் மண்டைக்காடு பகுதிக்கு வந்தார். அப்போது, அவர் சாப்பிடுவதற்காக பிரியாணியை வாங்கிக்கொண்டு வெட்டுமடை கடல் பகுதிக்கு சென்றார்.
அங்கு அவர் பிரியாணியை சாப்பிட்ட பிறகு ஆட்டோ ஓட்டுனரிடம் கையை கழுவிவிட்டு வருவதாக தெரிவித்து விட்டு கடலை நோக்கி குழந்தையுடன் சென்றார். இதையடுத்து அவர் நீண்ட நேரமாகியும் வராததால் பதற்றமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பகுதியாக வந்த ஒரு வாலிபரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட வாலிபர் கடலில் சென்று பார்த்தபோது, சசிகலா பிணமாக கடலில் மிதந்துள்ளார். அதன் பின்னர் அந்த வாலிபர் கடலில் குதித்து சசிகலாவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால், குழந்தையை காணவில்லை.
இதையடுத்து அந்த வாலிபர் சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் படி விரைந்து வந்த போலீசார் உடலை மெட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், மீனவர்களின் உதவியுடன் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போலீசார் சசிகலா குடும்ப பிரச்னையால் குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.