குஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ள பாஜக!!

நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் உள்ள குஷ்பூவுக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள், பரப்புரைகளில் பங்கேற்று வருகிறார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலின் போது கூட தமிழர் வசிக்கும் பகுதியில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அதே போல் பெண்கள் உரிமைக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ட்விட்டரிலும் கருத்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் தேசிய மகளிர் ஆணைய றுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து குரல் கொடுத்து வருவதாக கூறியுள்ள அவர், அந்த வகையில் தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம், உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம் என்று குஷ்பூ உறுதிபட தெரிவித்துள்ளார். குஷ்புவுக்கு தமிழக பாஜக அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.