திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமான பயணியிடம் 30,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 24 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்தில இருந்து சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்த ஸ்கூட் விமானத்தில் ரகசிய தகவலின்பேரில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் பயணி ஒருவரிடம் 30 ஆயிரம் டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று மலேசியாவுக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் இருந்த பெண் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 21 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.