தேவகோட்டை அருகே சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: தேவகோட்டை அருகே சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவகோட்டை அருகே புளியடிக்கம்பத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவர் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரது மகள் அருள்நிஷா கல்லூரியில் படித்து வருகிறார். தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்று விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுள்ளனர்.

அப்பொழுது தேவகோட்டையில் இருந்து கோபாலபுரம் என்ற இடத்தில் வளைவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சொகுசு கார் அவருடைய இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இந்நிலையில், கார் மோதியதில் அருளானந்தம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரது மகள் அருள்நிஷா தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மதுரைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.