நடுரோட்டில் ஆண் நண்பருடன் சண்டையிட்ட மும்பை துணை நடிகை

மதுரையில் நடுரோட்டில் சண்டையிட்ட மும்பையை சேர்ந்த துணை நடிகை மற்றும் அவரது ஆண் நண்பருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊர் செல்லும்படி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 

 மதுரை பொன்மேனி நெடுஞ்சாலையில் இளம் ஜோடி ஒன்று  சண்டையிடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. 

இதன்பேரில் போலீசார் வந்து, 2 பேரையும்  காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், இளம்பெண்  உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த துணை நடிகை அங்கீதா பட்டாச்சார்யா என்பதும், அவருடன் இருந்தது பீகாரை சேர்ந்த நண்பர் நிதிஷ்குமார் என்பதும், கோவையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றுவிட்டு,   சுற்றுலா தலங்களை சுற்றிபார்க்க முடிவு செய்து மதுரை வந்த இடத்தில் சண்டையிட்டு கொண்டதும் கண்டறியப்பட்டது.

தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பணத்தை எடுத்து கொண்டதாகவும் நிதீஸ்குமார் மீது அங்கீதா புகார் தெரிவித்தார். பின்னர் 2 பேரிடமும் விசாரணை நடத்தி,  போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.