பேச்சிப்பாறை சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அருமனை: கடையால்மூட்டில்  இருந்து பேச்சிப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் நேற்று காலை 8 மணி அளவில்   மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டது. அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின்சார  வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பேச்சிப்பாறை அணைக்கு  செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பேச்சிப்பாறை, கோதையாறு மற்றும் சிலோன்  காலனி பகுதிகளுக்கு செல்லும் மலைவாழ் மக்களுக்கு பெரிதும் சிரமம்  ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.