சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரபு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சிறுநீரக பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரபுவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது.
மருத்துவமனையிலேயே இருந்து நடிகர் பிரபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த அவர், இன்று வீடு திரும்பினார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
newstm.in