Leo: விஜய் என்னிடம் நடந்துகொண்ட விதம்..உருக்கமாக பேசி படப்பிடிப்பில் இருந்து விடைபெற்ற பிரபலம் ..!

விஜய்
லியோ விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இருப்பினும் அப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் இல்லை என்ற சிறு வருத்தம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அந்த வருத்தத்தை போக்கும் வகையில் தற்போது லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார் லோகேஷ். லியோ திரைப்படம் 100 % என் படமாகவே இருக்கும் என லோகேஷ் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். இதன் காரணமாக ரசிகர்கள் இப்படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்

எதிர்பார்ப்பு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்றவுடனே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு மிகமுக்கிய காரணம் லோகேஷின் முந்தைய படமான விக்ரமின் வெற்றி தான். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை லோகேஷ் கையாண்ட விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க அப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை அடைந்தது. இதையடுத்து லோகேஷ் விஜய்யுடன் இணைந்து முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என தெரிந்ததும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு அளவில்லாமல் போனது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ கடந்த மாதம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே இப்படம் பல கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது

படப்பிடிப்பு தற்போது லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், கௌதம் மேனன் , மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது லியோ படக்குழு காஷ்மீரில் உழைத்து வருகின்றது. இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு லியோ படக்குழு சென்னை திரும்பவுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் மே மாதத்திற்குள் முடித்துவிட்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மிஸ்கின் உருக்கம் இந்நிலையில் தற்போது காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மிஷ்கினின் போர்ஷன் முடிந்துவிட்டதாக அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புவதாகவும், கடும் குளிரையும் பொருட்படுத்தாது லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்துள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் படக்குழு அனைவரையும் பாராட்டி பேசிய மிஸ்கின், அருமை தம்பி விஜய் என்னிடம் பண்பாகவும், அன்பாகவும் நடந்துகொண்ட விதத்தை நான் மறக்கவே மாட்டேன் என உருக்கமாக பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் மிஸ்கின் மிகவும் நெருங்கி பழகியதாகவும் , மிஷ்கினின் பேச்சு விஜய்க்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாகவும் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.