அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற தெரு நாய்: ராஜஸ்தானில் அதிர்ச்சி | Stray Dog Kills Infant Sleeping Next To Mother In Rajasthan Hospital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், அரசு மருத்துவமனையில் தாய் அருகில் தூங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை தெருநாய் தூக்கி சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர மீனா என்பவர் உடல்நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி ரேகா மற்றும் பிறந்த ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகள் உடன் தங்கியிருந்தனர். ரேகா, கணவரை கவனித்து வந்தார். நேற்று இரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அந்த வார்டில் மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லை.

அப்போது, மருத்துவமனைக்குள், இரண்டு தெருநாய்கள் உள்ளே வந்தன. அதில் ஒரு நாய் குழந்தையை தூக்கி வெளியே சென்று கடித்தது. அதில், பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

latest tamil news

இதனிடையே, போலீசார், மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள், ரேகாவிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதுடன் மட்டுமல்லாமல், தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை தகனம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.