உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்| Elon Musk Is World’s Richest Person Again

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எலான் மஸ்க் 2வது இடத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்தது. இதனால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 70 சதவீதம் அதிகரித்து, 187.1 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இதனால், எலான் மஸ்க் மீண்டும் புளூம்பெர்க்கின் உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.

latest tamil news

பெர்னார்ட் அர்னால்ட் 185.3 அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் , இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.