'ஏ… இந்தாமா' மார்டன் மங்கையிடம் மயங்கினாரா நடிகர் மாரிமுத்து… உண்மை என்ன?

Actor Marimuthu Issue: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படுபவர் நடிகர் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் பிரபலமடைவதற்கு முன்பே இவர் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவராக இருந்தார். பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பிரபலமான படங்களிலும் இவர் நடித்திருந்தார். 
 
இவரின் துல்லியமான தமிழ் உச்சரிப்பும், மிடுக்கான உடல்வாகும் பலரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.  ஆனால், இவர் நடிகராவதற்கு இயக்குநராக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். 2000இல் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். 
 
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். சமீபகாலங்களில் ‘எதிர் நீச்சல்’ தொடரில் அவரின் ‘ஏ… இந்தாம்மா’ என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக வலம் வந்துகொண்டிருந்தது. அந்த வகையில், மாரிமுத்து திடீரென டிரெண்டாக ஆரம்பித்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.