சென்னை: மாணவி மரணம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் பள்ளியில் மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்கு தீ வைத்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதுடன், பல கோடி மதிப்புள்ள வாகனங்களையும் தீ […]