காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகே ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அருண்குமார். மாற்றுத்திறனாளியான இவர் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் கடந்த 21-ந்தேதி ஆனம்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக தன்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இதையடுத்து இவர் மேல்பேரமநல்லூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்தக் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிசிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.