வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படலாம் என தெரிகிறது.
புதுடில்லியில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை, 2021-2022 நிதியாண்டில் திருத்தப்பட்டது. தனியாருக்கு மதுபான விற்பனையை அதிகளவில் வழங்கும் வகையில் இந்த கொள்கை அமைந்திருந்தது. இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு புதுடில்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம், எட்டு மணி நேரம் கிடுக்கிப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததாலும், உரிய தகவல்களை தெரிவிக்க மறுத்ததாலும் அவர் கைது செய்யப்பட்ட தாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டதை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement