திருச்சி: லால்குடி அடுத்த அன்பில் என்ற பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ஆசிரமவள்ளி அம்மன் கோயில் விழா தொடர்பான இரு தரப்பு பிரச்சனையால் போராட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. போராட்டம் நடக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு கருதி கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.