தெரு நாயிடம் அசிங்கமாக நடந்து கொண்ட நபர்!! VIDEO

தெருநாயை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டெல்லியில் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நாயை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனையடுத்து அந்த நபர் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

வெட்கக்கேடான செயலை கண்டுகொள்ளாத டெல்லி போலீஸார் என்று அவர் வீடியோவை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் வீடியோவுக்கு கமென்ட் செய்து, கேவலமாக செயலில் ஈடுபட்ட நபரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பன்குரி, குற்றவாளிக்கு டெல்லி போலீஸ் கவசமாகச் செயல்படுகிறது என்று கூறினார். அதே போல் விலங்கு ஆர்வலர்களும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதனையடுத்து 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தெரு நாயை வன்கொடுமை செய்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.