பூரண நலத்துடன் பிரபு வீடு திரும்பினார்

நடிகர் திலகம் சிவாஜியின் கலை வாரிசு, 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் பிரபு. கடந்த 21ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைனில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் தில் கல் அடைப்பு இருப்பதாகவும், அதற்காக சிசிக்சை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அடைப்பு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து பிரபு நேற்று அன்னை இல்லம் திருப்பினார். அவரை ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டில் ஒரு வாரம் வரை ஓய்வெடுக்க இருக் கும் பிரபு. பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.