திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பகுதியில் நடத்தப்பட்டு வரும் அழகு நிலையங்களில், போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அழகு நிலையங்களையும், அங்கு பணிபுரிபவர்களையும் கலால் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை சாலக்குடி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் ஷீலா சன்னி (51) என்பவர் தன்னுடைய ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த கலால் துறையினர் அவரிடம் சோதனை நடத்தினர். அவரது ஸ்கூட்டரில் வைத்திருந்த பேக்கில் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
உடனே அவரை பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஷீலா சன்னியை கலால் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு சாலக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.