வேகத்தடைக்கு வெள்ளை கோடு.. சமூக சேவகியான இளம் பெண் மருத்துவர்.! குவியும் பாராட்டு.! 

பெண் மருத்துவர் ஒருவர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ள சம்பவம் பெருங்களத்தூர் அருகே பாராட்டுகளை குவித்து வருகின்றது. 

பெருங்களத்தூர் முதல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் வழியே கொளப்பாக்கம் செல்கின்ற முக்கிய சாலையில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக வேகத்தடைகள் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.  

நாளடைவில் அந்த வேகத்தடையில் போடப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கோடுகள் அழிந்து போனது. எனவே, அந்தக் கோடுகளை மீண்டும் போடும் நடவடிக்கையில் பாஜகவின் மாவட்ட மருத்துவ பிரிவு பெண் நிர்வாகியான மஞ்சு பிரியா ஈடுபட்டுள்ளார்.

அவர் சாலையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கின்ற பணி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.