காபூல் : ஆப்கனில், விவகாரத்துக்கு உள்ளான பெண்களை, மீண்டும் தங்கள் கணவர்களுடன் சேர்ந்து வாழும்படி தலிபான் அமைப்பினர் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு திருமணமாகி விவகாரத்துக்குள்ளான பெண்கள் பலர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்கப் படையினர் ஆப்கனை மீட்டபோது, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். எனினும் தலிபான் ஆட்சிக்கு வந்தபின், பெண்கள் கடும் துயரங்களுக்கு உள்ளாகினர்.
குறிப்பாக, விவகாரத்துக்கு உள்ளான பெண்களை, முன்னாள் கணவர்களுடன் சேர்ந்து வாழும்படி தலிபான் ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தினர். இவ்வாறு கட்டாயப்படுத்தி வாழ்ந்த பெண்களை, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதுடன், பற்களை உடைத்தும் காயப்படுத்தி உள்ளனர்.
இதுபோல் பாதிக்கப்படும் பெண்கள், நீதிமன்றங்களை நாடினாலும், நீதி மறுக்கப்படுவதாகவும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என ஆணாதிக்கம் நிறைந்ததாகவே ஆப்கன் இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement