எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாது, எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – எச்சரித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

எதிர்கால யுத்தங்களை கணிக்க முடியாதென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரம் டன் எடையுடன் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான INS Vikrant -ல் கடற்படை கமாண்டர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், கடலோர பகுதிகளிலும் தொடர்ந்து விழிப்புடனும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கடற்படை தயாராக இருக்க வேண்டும் என்றார்.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட துறை மூலம் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஆர்டர்கள் வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.