பிரபல நடிகை உட்பட 40 பேரிடம் பண மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வங்கி விவரங்களை கேட்டால் சொல்ல வேண்டாம் என்று வங்கிகள் எத்தனை முறை அறிவுறுத்தினாலும் மக்கள் கேட்பதாக இல்லை. அடிப்படையான ஓடிபி சொல்லக்கூடாது, வங்கி கணக்கு எண் சொல்லக்கூடாது என்று பலரும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அதே போல் தெரியாத லிங்க்கை கிளிக் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தலும் உள்ளது.
அதனால் சைபர் பண மோசடி குற்றங்கள் தொடர்கிறது. அந்த வகையில் நடிகை உட்பட 40 பேர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளனர். மும்பையில் தனியார் வங்கியை சேர்ந்த 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் கேஒய்சி, பான் விபரங்கள் அப்டேட் குறித்து லிங்க் உடன் மெசேஜ் அனுப்பியது.
அந்த லிங்க்-ஐ கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் பணம் திருடப்பட்டுள்ளது. வங்கியில் கேஒய்சி, பான் விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், வாடிக்கையாளர்கள் ஏமாந்துள்ளனர்.
இந்நிலையில் மும்பை போலீஸார் வங்கி தரவுகள் குறித்து வரும் மெசேஜில் இருக்கும் லிங்க்-களை கிளிக் செய்ய கூடாது என மக்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட 40 வாடிக்கையாளர்களில் டிவி நடிகை சுவேதா மேனனும் ஒருவர்.
குறிப்பிட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தகவல்களை பதிவு செய்த உடனே, வங்கி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த அழைப்பில் பேசியவர் ஒடிபியை பதிவிட சொன்னதால் பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் வங்கி கணக்கில் இருந்து 57,636 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாக நடிகை சுவேதா புகாரில் தெரிவித்துள்ளார்.
newstm.in