Sai Pallavi, Leo: அஜித்தின் துணிவை அடுத்து விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

Sai Pallavi says no to Ajith, Vijay: அஜித் மற்றும் விஜய் பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்த போதிலும் நடிக்க மறுத்திருக்கிறார் சாய் பல்லவி.

​சாய் பல்லவி​நிவின் பாலியின் பிரேமம் மலையாள படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சாய் பல்லவி. அவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
​துணிவு​ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்திருக்கிறது. மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு சாய் பல்லவியிடம் கேட்டிருக்கிறார் வினோத். ஆனால் அது வெயிட்டான கதாபாத்திரம் இல்லை, அதனால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் சாய் பல்லவி.
​ரசிகர்கள்​துணிவு படத்தில் மட்டும் சாய் பல்லவி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. ஏன் இப்படி செய்துவிட்டார் என அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்னர். துணிவு மட்டும் அல்ல விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டிருக்கிறார்கள். தளபதி படத்திலும் நடிக்க மறுத்துவிட்டார் சாய் பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது.
​லியோ​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். என்னால் சும்மா வந்துவிட்டு போகும் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று லோகேஷ் கனகராஜிடம் கூறிவிட்டாராம் சாய் பல்லவி.

​Lokesh Kanagaraj: இதுவரை ஒரு ஃப்ளாப் கூட கொடுக்காத லோகேஷ் கனகராஜ்: லியோ ஏற்கனவே ரூ. 400 கோடி வசூல்

​விஜய்​தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சாய் பல்லவி. நிகழ்ச்சி ஒன்றில் விஜய் நடந்து வர, சார் நான் உங்களின் ரசிகை என சாய் பல்லவி கூறியபோது எடுக்கப்பட்ட வீடியோவை ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தும் லியோ படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரம் நிச்சயம் டம்மியாகத் தான் இருக்கும் என்கிறார்கள் சாய் பல்லவியின் ரசிகர்கள்.
​த்ரிஷா​லியோ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. ஜன்னலோரமாக அமர்ந்து குரங்கிடம் பாசம் காட்டியிருக்கிறார் த்ரிஷா. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, நீங்க குரங்கிடம் பேசுங்க, அங்கே உங்களை போட்டுத்தள்ள ஆள் கூட்டிட்டு வந்துட்டாங்க என மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். லியோ படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் கொலை செய்யப்படும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.