Ponniyin Selvan 2: திரிஷாவிடம் சரணடைந்த கார்த்தி: ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்.!

புத்தக வாசகர்களுக்கு பிரியமான மற்றும் பல உச்ச நட்சத்திரங்கள் படமாக்க வேண்டும் என விரும்பிய நாவலான பொன்னியின் செல்வனை படமாக்கி பலரின் கனவை நிறைவேற்றி வைத்தார் மணிரத்னம். கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது.

கல்கியின் பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக உருவானது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற இந்தப்படம் இரண்டாம் பாகத்திற்கான லீடுடன் முடிந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மல்டி ஸ்டார் படமாக வெளியான இந்தப்படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, லால், கிஷோர், பாபு ஆண்டனி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளை படமாக்கினார் மணிரத்னம். லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்ட பொருட் செலவில் இந்தப்படத்தை உருவாக்கினார்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் இந்தப்படத்தை தூக்கி நிறுத்தியது. முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

Chinmayi: உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசிய சின்மயி: வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பாடம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்த்ப்பாடல் ‘அக நக’ என துவங்குகிறது. இந்தப்பாடலுக்காக படக்குழு வெளியிட்டுள்ள பிரத்யோக போஸ்டர் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது வந்தியத்தேவனான கார்த்தி, குந்தவையான திரிஷா முன்பு மண்டியிட்டுள்ளது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் திரிஷா கையில் வாளுடனும், கார்த்தி கண்கள் கட்டப்பட்டும் உள்ள இந்த புகைப்படத்திற்கு குந்தவையிடம் வந்தியத்தேவன் சரணடைந்து விட்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சி பொங்க கமெண்ட் அடித்து வருகின்றனர். ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா முதல் பாகத்தினை போலவே பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன் 2’ வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Parthiban: பார்த்திபனை பழி தீர்க்க இப்படி செய்தாரா ‘லவ் டுடே’ பிரதீப்.?: வெளியான பரபரப்பு தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.