இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில், கடந்த சனிக்கிழமை இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்ற வளாகத்தில் சாதாரண உடையிலிருந்த உளவுத்துறை அதிகாரிகளை, மர்ம நபர்கள் என குறிப்பிட்ட இம்ரான் கான், அவர்கள் கயிற்றால் தனது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கலவரத்தில் தான் உயிரிழந்துவிட்டது போல் நாடகமாடத் திட்டமிட்டுருந்ததாக கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், வரும் நாட்களில் காணொலி மூலம் வழக்கு விசாரணையை நடத்துமாறு தலைமை நீதிபதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.