வைரலாகும் புகைப்படங்கள்..!! ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா திடீர் திருமணம்..!

2010-ம் ஆண்டு வெளியான ‘அந்தரி பந்துவாயா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, தீய வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களிலும் தமிழிலும் நடித்தார்.

சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்காததால் சீரியலுக்குச் சென்ற பிரியங்கா நல்காரி, 2015-ம் ஆண்டு முதல் தெலுங்குத் தொடர்களில் நடித்து வருகிறார். இதையடுத்து 2018-ம் ஆண்டு வெளியான ரோஜா என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.

இதில் நடிகர் சிப்புவுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்தார். நாளுக்கு நாள் இந்த சீரியல் பிரபலமாகி வருவதால் இதன் டிஆர்பியும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பலருக்கும் பிடித்த சீரியலாக நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த ரோஜா சீரியல். போன வருடம்தான் இந்த சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டார்கள்.

ரோஜா சீரியலை முடித்துவிட்டு தற்போது சீதா ராமன் சீரியலில் நடித்து வருகிறார் பிரியங்கா நல்கரி. இந்த சீரியலும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பிரபல வில்லி நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டியும் நடிக்கிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி தற்போது ரகசிய திருமணம் செய்துள்ளார். பிரியங்காவின் திருமணம் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் நடந்தது. தொழிலதிபர் ராகுல் வர்மாவை காதலித்து வருகிறார். தனது திருமணம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக பிரியங்கா கூறியுள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.