கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் 30 பேர் மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கும்பக்கரை அருவியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் 1 மணியளவில் கனமழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்த கனமழை காரணமாக ெகாடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கும்பக்கரை தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறையான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர். கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியின் வடக்கு பகுதிக்கு சென்ற 30 பேர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர். வனத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.