திருச்சி :  தடுப்பூசி போட்ட 8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்.!

திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் தடுப்பூசி போடப்பட்ட 8 பச்சிளம் குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவில் மாம்பலா சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காப்பகத்தின் 20 குழந்தைகளுக்கு சளிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில்,  8 குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக வீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அங்கே சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் சளி காரணமாக தான் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.