எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பாஜ, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளிடையே வலுவான போட்டி இருந்தாலும், இதில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) ‘பஞ்சரத்னா’ என்ற அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சியின் அடிப்படையில் ஓட்டு கேட்க உள்ளது. தேசிய கட்சிகள் மஜத.வின் எல்லை பழைய மைசூரு வரை மட்டுமே என்ற விதத்தில் தவறாக பிரசாரம் செய்கின்றன. அதை தாண்டி வெற்றி பெற்று, மஜத ஆட்சி அமைத்து பஞ்சரத்னா திட்டத்தை அமல்படுத்தும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும் ,’’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.