கார்கில் போரில் ஈடுபட்டு வீர் சக்ரா விருது பெற்ற வீரர் சாலை விபத்தில் பலி..!!

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகால எல்லை பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும், கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர். இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் மூண்டது.

சவால்கள் நிறைந்த, மிக பெரிய மலைத்தொடரில் நடந்த இந்த போரில் இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்தது. இந்த சண்டையில் 500-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்து கார்கில் போர் வெற்றியை மீட்டெடுத்தனர்.

இந்த கார்கில் போரில் தீரமுடன் ஈடுபட்டவர் மேஜர் பதவி வகித்த சுபேதார் சிவாங் முரோப். கார்கில் போரில் வெற்றி பெற போராடிய அவருக்கு அரசு சார்பில் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இதனால், அவரது கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது குடும்பத்தினரை லெப்டினன்ட் ஜெனரல் ராஷிம் பாலி நேரில் சந்தித்தார்.

விபத்தில் உயிரிழந்த சிவாங் முரோப்பின் தந்தையான நாயப் சுபேதார் செரிங் முதோப், என்பவரை நேரில் சந்தித்து இந்திய ராணுவம் சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஆறுதல் கூறினார். சிவாங் முரோப்பின் தந்தையும் படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், அசோக சக்ரா விருது பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.