பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளை தடுக்க கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஹால்மார்க் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடியும். நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய ஹால்மார்க் நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கையிருப்பில் உள்ள நகைகளை விற்பனை செய்யும் வகையில், பழைய ஹால்மாக் நடைமுறைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நகைக்கடை உரிமையாளர்கள், நகை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, பழைய நடைமுறையில், நகைக்கடை உரிமையாளர்கள் நகைகளை விற்பனை செய்ய ஏதுவாக, பழைய ஹால்மார்க் நடைமுறைக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.