கூட்டணி பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.. மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை – இபிஎஸ் பேட்டி!

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும், மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி இன்று காலை நான்கு ரோடு அருகே மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.