சிபிஐ 60ம் ஆண்டு விழா பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சிபிஐ அமைப்பு கடந்த 1963ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டது.   சிபிஐ.யின் 60ம் ஆண்டு விழா டெல்லி விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது.  பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், ஷில்லாங், புனே, நாக்பூர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். சிபிஐ வைர விழா ஆண்டின் நினைவாக தபால்தலையையும் வெளியிட உள்ளார். அத்துடன், சிபிஐ அமைப்பின் டிவிட்டர் கணக்கையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.