#திண்டுக்கல் | மனைவிக்கு புகைப்படங்கள் அனுப்பிய காதலி.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…!

திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவிக்கு காதலி புகைப்படங்கள் அனுப்பியதால் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (33). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தபோது, வந்தவாசி சேர்ந்த ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வேலையில் நின்ற ராஜசேகரன், திண்டுக்கலில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் வசூலிப்பவராக வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து ராஜசேகரனுக்கு உறவினர் பெண்ணான சித்ரா(27) என்பவருடன் கடந்த ஐந்து மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதையறிந்த ராஜசேகரனின் காதலி, அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து ராஜசேகரனின் காதலி, தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் தனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை மனைவி சித்ரா மற்றும் உறவினர்களின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராஜசேகரனுக்கும், சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த ராஜசேகரன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.