சிவகங்கை: ராகுல்காந்தி தகுதிநீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2019-ல் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கவேண்டாம் என வாதியே மனுத்தாக்கல் செய்தும் குஜராத் நீதிமன்றம் விசாரித்துள்ளது என்று தெரிவித்தார்.
