Dhanush: செல்வராகவனை கழட்டிவிட்டு தரமான சம்பவத்திற்கு தயாரான தனுஷ்..D50 லேட்டஸ்ட் அப்டேட்..!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.

​ஏறுமுகம்இடையில் சில காலம் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து வெளியான நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான வாத்தி திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூலை ஈட்டியது. இந்நிலையில் இப்படங்களின் மூலம் தனுஷ் மார்க்கெட் மேலும் உயர துவங்கியுள்ளது

​லைன் அப்ஸ்வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பான் இந்திய படமாக உருவாகி வருகின்றது. மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதையடுத்து மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கும் தனுஷ் மீண்டும் இயக்குனராக களமிறங்க இருக்கின்றார். தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கின்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்

​மீண்டும் தயாரிப்புதனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். WUNDERBAR என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்தார் தனுஷ். கடைசியாக ரஜினியின் காலா படத்தை தயாரித்த தனுஷ் அதன் பின் பட தயாரிப்பை நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தனுஷ் மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். கர்ணன் என்ற வெற்றி படத்தை தனக்கு கொடுத்த மாரி செல்வராஜின் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்தை தனுஷே தயாரிக்கிறார். இதைப்பற்றிய அறிவிப்பை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் தனுஷ்

​D50இந்நிலையில் தனுஷ் இயக்கவுள்ள அவரது ஐம்பதாவது திரைப்படத்தை பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் இயக்கவுள்ள D50 திரைப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது இப்படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என சில செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக புதுப்பேட்டை இருந்து வருகின்றது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் பலராலும் பாராட்டப்பட்ட படமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் இயக்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அவ்வாறு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.