அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் குற்றவழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை கொறடா கொண்டு பிடுங்கிய ஏ.எஸ்.பி. பலவீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. பலவீர் சிங் தொடர்பாக வெளியான செய்தியை அடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்தார். இதனைத் தொடர்ந்து முதன்மைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்.சை விசாரணை அதிகாரியாக நியமித்து ஐ.பி.எஸ். அதிகாரி பலவீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. […]
