எடப்பாடி தலைமையில் புதிய ஆட்சி அமையும்: மாஜி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!

அதிமுக உட்கட்சி மோதலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என சட்டப் போராட்டம் நடத்திய போதும் தீர்ப்புகள்

தரப்புக்கே சாதகமாக வந்துள்ளன. இருப்பினும் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் படி கட்சி விதிகள் மாற்றப்பட்டதையும், அதன் பின்னர் பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்தது.

முப்பெரும் விழா குறித்த ஓபிஎஸ் அதிமுக அணியின் ஆலோசனை கூட்டம்

இதனால் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையம் இன்னும் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற உச்ச பதவியில் நான் தான் இருக்கிறேன் என்று கூறி வந்தார்.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் கட்சி விதிகள் மாற்றப்பட்டதற்கும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி வழங்கியுள்ளது

இது தொடர்பாக இன்று சட்ட மன்ற வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைக்கும். 2026ஆம் ஆண்டு ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைவதற்கு இந்தத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.