சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் சித்து என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அர்னாவ்.
பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார் திவ்யா. அதோடு தனது கணவர் அர்னாவ் அவருடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த திவ்யா, அர்னாவ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில். நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்னாவ் மீது பதிவான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. அர்னாவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரை விரைவில் கைது செய்ய போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.