வடக்கு – கிழக்கில் எதிர்வரும் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) கதவடைப்பு அனுஸ்டிக்க தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் பயங்கரவாத
எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 25ஆம்
திகதி முழுமையான கதவு அடைப்புக்கு தமிழ் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.