பூஞ்ச் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 5 வீரர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி..!

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு இறுதியஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பஞ்சாபின் லூதியானவில் உள்ள மந்தீப் சிங்கின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல, உயிர்நீத்த மற்ற வீரர்களான குல்வந்த் சிங், ஹர்கிரிஷன் சிங் மற்றும் சேவக் சிங்கின் உடல்களுக்கும் அவர்களது சொந்த ஊரில் இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் சென்றடைந்த வீரர் தேபாஷிஷ் பஸ்வாலின் உடலுக்கு, அம்மாநில ஆளுநர் Ganeshi Lal மரியாதை செலுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.