
இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக 8 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி, டெக்கான் நகர கூட்டுறவு வங்கி, மிலாட் கூட்டுறவு வங்கி, முதோல் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல், ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி, பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி, லட்சுமி கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதிய மூலதனம் மற்றும் பிற விதிமுறைகளை மீறியதால் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வங்கிகளில் பணப்புழக்கம் இல்லை என்பதாலும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சில கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.

வங்கி திவாலாகினாலோ அல்லது ரிசர்வ் வங்கி, வங்கி உரிமத்தை ரத்து செய்தாலோ, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ரூ. 5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in