அதிகரிக்கும் கொரோனா..!! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்தது. நேற்று முன் தினம் இந்தியாவில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், நேற்று கொரோனா பரவல் குறைந்தது. நேற்று இந்தியாவில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தகவல் தெரிவித்துள்ளார். சஞ்ஜீவ் கண்ணா, ரவீந்தர்பட், ஜே.பி.பர்திவாலா, அனிருத்தா போஸ், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அனுமதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.