இன்ஸ்டாவில் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பியோடிய கேரள இளைஞர் கைது..!

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பியோடிய கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அஜீன் சாம் என்பவர் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இவர், களியக்காவிளையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியிடம் பழகியிருக்கிறார். திருமண ஆசை காட்டி, சிறுமியை நொய்யாற்றின் கரையில் உள்ள தனியார் விடுதிக்கு, தனது நண்பர்களுடன் சேர்ந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, சிறுமியை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டு, தனது செல்போனை அணைத்திருக்கிறார்.

அடுத்த நாள் முதல் தொடர்புகொள்ள முடியாத சிறுமி, நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் எர்ணாகுளம் சென்று அஜிமையும், அவருடன் வந்த பூர்ணிமா தினேஷ், ஸ்ருதி சித்தார் என்ற பெண்கள் உள்பட, மேலும் நால்வரை கைது செய்துள்ளார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.