கார்ப்பரேட் நலனா, மக்கள் நலனா? திமுக அரசை விமர்சித்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்

வலியுறுத்தி உள்ளார்.

திமுக-வில் 8 அமைச்சர்கள் அதிமுக-வில் இருந்து சென்றவர்கள் தான் – எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் முடிவுகள் கடந்த சில நாள்களாக பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகுக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றியது கூட்டணிக் கட்சியினரையே முகம் சுளிக்க வைத்தது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மது விருந்து நடத்த அனுமதியளிக்கும் வகையில் அரசாணை ஒன்று வெளியாகிய நிலையில் சமூக வலைதளங்கள் முழுக்க திமுக அரசுக்கு எதிரான கருத்துகள் பரவ காரணமாக அமைந்தது.

அடுத்தடுத்து இரு எதிர்ப்புகள் வந்த நிலையில் இரண்டிலும் தமிழ்நாடு அரசு விமர்சனங்களுக்கு மதிப்பளித்து தன் முடிவிலிருந்து பின் வாங்கியது.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளிக் கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.