இலங்கையில் செல்லுபடியாகும் இந்திய பணம்..!

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்திய ரூபாயை உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இக்கருத்தினை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை உருவாக்குவது, இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவதோடு, இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.