சிங்கள ஆளுநர் வசந்தா கரணகோடா அமெரிக்காவிற்குள் நுழையத் தடை

ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக இலங்கையின் வட மேற்கு மாகாண ஆளுநர் வசந்தா கரணகோடா, அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வசந்தா கரணகோடா, சிங்கள கடற்படை தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், பணக்கார தமிழ் குடும்பங்களில் பிறந்த சிறுவர், சிறுமியரை கடத்தி, பெற்றோர்களிடம் பணம் பறித்து, பின் அனைவரையும் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதில் உண்மைக்கான முகாந்திரம் உள்ளதால் அவரையும், அவரது மனைவியையும் அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.