நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த காவலரின் உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்நீத்த மாவட்ட ரிசர்வ் காவலரின் உடல் இருந்த சவப்பெட்டியை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார்.

தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேர் உள்பட 11 உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்று துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை அடுத்து, மாவட்ட ரிசர்வ் காவலரின் உடலை பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். உயிர்நீத்தவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.