Rajinikanth: ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் சூர்யா? தீயாய் பரவும் தகவல்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனது போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதனை இயக்குநர் நெல்சன் திலீப்குமாரே பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயிலராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Radhika Preethi: நம்ம பூவரசியா இது.. குட்டி கவுனில் ராதிகா ப்ரீத்தி.. அசத்தல் க்ளிக்ஸ்!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பேன் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக தலைவர் 170 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் ராஜா இயக்குகிறார். இதில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவின் காட்சிகள் 15 நிமிடங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Samantha: கணக்குல 100க்கு 100… சமந்தாவோட 10வது மார்க் ஷீர் பாத்தீங்களா? வேற லெவல்!

இந்நிலையில் தலைவர் 170 படத்திலும் நடிகர் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல் மற்றும் கங்குவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நடிகர் சூர்யா அவ்வப்போது சென்னைக்கு வந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று செல்கிறார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பெண்களையும் பெரு மூச்சு விட வைக்கும் த்ரிஷா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.